ஊர்க்காவல் படை தேர்வின் போது மயக்கமடைந்த பெண்ணை ஆம்புலன்ஸில் ஏற்றிச் சென்ற சிலர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.
இதனையடுத்து, அங்கு தயாராக இருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தில் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். சிகிச்சைக்குப் பின்னர் அப்பெண் இயல்புநிலைக்கு திரும்பியுள்ளார்.
இந்நிலையில், ஓடும் வாகனத்திலேயே அதிலிருந்த ஊழியர்கள் தன்னை பாலியல் வன்கொடுமை செய்தனர் என்று குறித்த பெண் புகார் செய்துள்ளார். உடல் தகுதித் தேர்வின் போது சுயநினைவை இழந்த போதிலும், ஆம்புலன்ஸில் சென்றபோது சற்று நினைவு திரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த பொலிஸார் இது குறித்து விசாரிப்பதற்காக சிறப்பு புலனாய்வு குழுவை அமைத்தனர்.
விசாரணை நடாத்திய அக்குழுவினர் சிசிடிவி ஆதாரத்தின் அடிப்படையில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் மற்றும் ஒரு தொழிநுட்ப ஊழியரை கைது செய்து விசாரணை நடாத்தி வருகின்றனர்.
0 Comments