Ticker

10/recent/ticker-posts

புதிய பிரதம நீதியரசர் பதவியேற்பு.

நாட்டின் புதிய பிரதம நீதியரசராக ப்ரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.



கௌரவ நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (27) காலை பதவியேற்றார். இவர், இலங்கையின் 49 வது நீதியரசர் ஆவார்.



முன்னாள் பிரதம நீதியரசர் முர்து நிருபா பிதுஷினி பெர்னாண்டோ ஓய்வு பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு கௌரவ நீதியரசர் சூரசேன அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார். 


Post a Comment

0 Comments