Ticker

10/recent/ticker-posts

இஸ்ரேலுக்கு நெருக்கடியாக மாறும் ஐரோப்பிய நாடுகள்.

 காஸாவிற்கு செல்லும் உதவிப் பொருட்கள் மீதான கட்டுப்பாடுகளை இஸ்ரேல் உடனடியாக நீக்க வேண்டுமென்று பிரித்தானியா, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனி ஆகிய நாடுகள் வலியுறுத்தியுள்ளன. 

உதவியை நிறுத்தி வைப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் குறித்த நாடுகள் தெரிவித்துள்ளன. காஸாவில் கடந்த 24 மணி நேரத்தில் மாத்திரம் 09 பேர் ஊட்டச்சத்து குறைப்பாட்டால் இறந்துள்ளதாக ஹமாஸ் நடாத்தும் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டு உதவிகளை விமானம் மூலமாக காஸாவிற்குள் அனுப்ப அனுமதிக்கப்படும் என்று இஸ்ரேல் கூறி வருகின்றது. ஆனால், இது இஸ்ரேல் கூறும்படி நடக்கவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் சுட்டிக் காட்டியுள்ளன.

ஹமாஸின் பிடியிலுள்ள பணயக் கைதிகளை மீண்டும் தனது நாட்டிற்கு அழைத்து வருவதற்கு இஸ்ரேல் உதவிகளை தடுக்கும் தந்திரோபாயத்தை பயன்படுத்துவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையிலேயே, காஸாவிற்குள் செல்லும் உதவிப் பொருட்கள் உடனடியாக அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஐரோப்பிய நாடுகள் வலியுறுத்துகின்றன. முன்னர், பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் பலஸ்தீன மாநிலத்தை அங்கீகரிப்பதாக உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. 

Post a Comment

0 Comments