கிழக்கு மாகாணத்தின் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் உயர்தரத்தில் முதலிடம் பெற்ற 360 மாணவர்களுக்கு நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்களை வழங்குவதற்கு ஜனாதிபதி செயலகம் முடிவு செய்துள்ளது.
இதன்படி, இது தொடர்பான நிகழ்வு நாளை (27) காலை 9.00 மணிக்கு மட்டக்களப்பு சுவாமி விபுலானந்தா நுண்கலை பீடத்தில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்
இத்திட்டத்தின் கீழ் 2023/2024 GCE (A/L) பரீட்சையில் ஒவ்வொரு மாவட்டத்திலிருந்தும் ஒவ்வொரு பாடப்பிரிவிலும் சிறந்து விளங்கிய 60 மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு நிதிய புலமைப்பரிசில் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படவுள்ளது.
மாகாண வாரியாக செயற்படுத்தப்படும் இத்திட்டம், சமீபத்தில் வட மாகாணத்தில் தொடங்கப்பட்டது, முதலாவது திட்டம் கிளிநொச்சியிலும், 02 வது திட்டம் தென் மாகாணத்தை மையமாகக் கொண்டு மாத்தறை மாவட்டத்திலும் செயற்படுத்தப்பட்டது.
இந்நிலையில், கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்ட 03 வது நிகழ்வு நாளை நடைபெறவுள்ளதுடன், இதில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன பிரதம விருந்தினராகக் கலந்து கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
மேலும், எதிர்காலத்தில் இத்திட்டத்தை மற்ற மாகாணங்களிலும் செயற்படுத்த ஜனாதிபதி நிதியம் தயாராகி வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
0 Comments