தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமானது இன்று சனிக்கிழமை (10) அதிகாலை 4.00 AM மணியளவில் திருகோணமலையிலிருந்து வடகிழக்கு திசையில் சுமார் 100 KM தொலைவில் நிலை கொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து இன்று அதிகாலை 5:30 AM மணியளவில் ஒரு காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக (Depression) வலுவிழந்து, இன்றைய பகல் வேளையில் திருகோணமலைக்கும் யாழ்ப்பாணத்திற்குமிடையில் இலங்கை கடற்கரையூடாக கடந்து செல்வதற்கு அதிக வாய்ப்புள்ளதாகவும் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

0 Comments