முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு வழங்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனத்தை அரசாங்கத்திடம் திருப்பியளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மஹிந்த ராஜபக்ஷவின் ஊடகப் பேச்சாளர் வெளியிட்ட அறிக்கையில், குறித்த வாகனம் நேற்று (03) திருப்பி கையளிக்கப்பட்டதாகத் அவர் தெரிவித்தார்.
ஜனாதிபதிகளின் உரிமைகள் நீக்குதல் சட்டம் நடைமுறைக்கு வந்ததன் பின்னர், மஹிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ இல்லம் மற்றும் வாகனங்களை திருப்பி கையளிக்குமாறு அரசாங்கத்திடமிருந்து அறிவிப்பு வந்தது.
இந்நிலையில் தற்போது பாதுகாப்பு வாகனமும் திருப்பி அனுப்பப்பட்டுள்ளது. இ இதன் காரணமாக மஹிந்த ராஜபக்ஷவின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்று எச்சரித்துள்ள அவர், அடுத்த வாரம், பொலிஸ்மா அதிபர், பாதுகாப்பு செயலாளர், மற்றும் பாதுகாப்பு பிரதானிகளைச் சந்தித்து மஹிந்த ராஜபக்ஷவின் பாதுகாப்புக்கு தேவையான வாகனங்களை பெற்றுக்கொள்வதற்கான கோரிக்கையை முன்வைப்போம்” என்று தெரிவித்துள்ளார்.
0 Comments