இலங்கையின் பாடத் திட்டத்தில் தேர்தல் பாடங்களைச் இணைப்பதற்கு தேர்தல் ஆணையகம் கல்வி அமைச்சகத்துடன் பேச்சுவார்த்தைகளைஆரம்பித்துள்ளது.
பொது மக்களுக்கு மத்தியில் அரசியல் அறிவை அதிகரிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
இதன்படி, தரம் 08 பாடத்திட்டத்தில் தேர்தல் கல்விகளை இணைப்பதற்கான திட்டங்கள் நடைபெற்று வருவதாகவும் தேர்தல் ஆணையர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
அரச கல்வி முறையில் சிவில் உரிமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்து போதுமான கவனம் செலுத்தப்படாமையால், முறையான கல்வியின் மூலம் அரசியல் கல்வியறிவு வழங்கப்பட வேண்டியதன் அவசியத்தை அவர் மேலும் சுட்டிக் காட்டியுள்ளார்.
0 Comments