Ticker

6/recent/ticker-posts

முகத்தின் அழகை அதிகரிக்க வேண்டுமா? வெறும் தக்காளி மட்டும் போதும்.

 தக்காளி ஐஸ் கியூப் முகத்திற்கு என்னென்ன நன்மையினை அளிக்கின்றது என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். இன்றைய காலத்தில் பலரும் தங்களுடைய முகத்தின் அழகை பராமரிப்பதற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர்.

இளம் வயதிலேயே முகத்தில் கரும்புள்ளி, பருக்கள், இறந்த செல்களால் வயதான தோற்றம் என்பவற்றுக்கு ஒருவர் சந்திக்க நேரிடுகின்றது. இதற்கான தீர்வினை தக்காளி ஐஸ் கியூப் கொண்டு சரி செய்யலாம்.

தக்காளி ஐஸ் கியூப்

தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் கியூப் தடவினால், இதிலுள்ள 'வைட்டமின் சி' பல நன்மைகளை தருகின்றது. தக்காளியில் ஆன்டி ஆக்ஸிடன்ட்கள் உள்ளதால் இவை முகத்தில் ஏற்படும் சிவப்பை குறைப்பதற்கு பெரிதும் உதவுகின்றது.

தினமும் முகத்திற்கு தக்காளி ஐஸ் கியூப் தடவி வந்தால் சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை இவை அகற்றி விடுகின்றது. தக்காளி சருமத்தை ஈரப்பதத்துடன் வைப்பது மாத்திரமில்லாமல் சருமத்தை மென்மையாகவும், மிருதுவாகவும் மாற்றுவதற்கு உதவுகின்றது.

தக்காளியில் அலர்ஜி எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளதால் அவை முகத்திலுள்ள பருக்களை கொஞ்சம் கொஞ்சமாக குறைப்பதற்கு உதவுகின்றது.

தக்காளியில் இருக்கும் ப்ளீச்சிங் பண்புகள் முகத்தில் ஏற்படும் பழுப்பு நிறத்தில் காணப்படும் மாற்றத்தை குறைப்பதுடன், முகத்தை சுத்தமாகவும் வைத்திருப்பதற்கு உதவுகின்றது.

தக்காளியை நன்றாக அரைத்து அதனுடைய சாற்றை ப்ரீசரில் ஐஸ் ட்ரேயில் ஊற்றி வைக்க வேண்டும். பின்பு ஐஸ் கட்டியாக மாறிய பின்னர் இதனை வைத்து முகத்திற்கு மசாஜ் செய்ய முடியும். 


Post a Comment

0 Comments