GCE (O/L) பரீட்சைப் பெறுபேறுகள் இம்மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என்று பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் பணி இறுதிக் கட்டத்தில் உள்ளதாகவும் பரீட்சைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற GCE (O/L) பரீட்சைக்கு 478,182 விண்ணப்பதாரர்கள் தோற்றியிருந்தனர்.
அவர்களில் 398,182 பேர் பாடசாலை விண்ணப்பதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments