இன்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வருகின்ற வகையில் எரிபொருள் விலைகளை அதிகரிக்க இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
இதன்படி, லங்கா ஒட்டோ டீசல் ஒரு லீட்டரின் விலை 15 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், இதன் புதிய விலை 289 ரூபாவாகும்.
இதே போன்று, மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 07 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், அதன் புதிய விலை 185 ரூபாவாகும்.
மேலும் 92 ஒக்டேன் பெற்றோல் ஒரு லீட்டரின் விலை 12 ரூபாவால் அதிகரிக்கப்பட்ட நிலையில், இதன் புதிய விலை 305 ரூபாவாகும்.
.
0 Comments