கல்விச் சுற்றுலாவுக்கு தன்னை மாத்திரம் அழைத்து செல்லாமல் இருப்பது மன ரீதியாக பாதிப்படையச் செய்வதாக தெரிவித்து வவுனியா – பூந்தோட்டம் பகுதியிலுள்ள பாடசாலையொன்றில் கல்வி பயிலும் மாணவன் ஒருவன் வலயக் கல்வி அலுவலகம் முன்பாகச் சாத்வீகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.
குறித்த மாணவன் சுற்றுலாவுக்கான பணம் செலுத்தியுள்ளதுடன், பெற்றோரின் சம்மத கடிதத்தையும் பெற்றிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
எனினும், குறித்த மாணவனை மட்டும் சுற்றுலாவுக்கு அழைத்து செல்லாமல் விட்டுச் சென்றுள்ளதாக கூறப்படுகின்றது.
0 Comments