திருகோணமலை மாவட்டத்திலுள்ள குச்சவெளி பிரதேச சபை தவிசாளர் கைது செய்யப்பட்டுள்ளார்.
05 லட்சம் ரூபாய் பணத்தை லஞ்சமாக பெற முனைந்தபோது இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்படி, விசாரணைகள் தொடர்ந்து இடம்பெற்று வருவதாகவும் காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடம்போடை என்ற கிராமத்திலுள்ள அரச காணி ஒன்றிற்கான அளிப்பு பத்திரம் பெற்றுத் தருவதாக கூறி இப்பகுதியை சேர்ந்த ஒருவரிடமிருந்து பிரதேச சபைத் தலைவர் இன்று காலை குச்சவெளி பிரதேச சபையிலுள்ள தமது அலுவலகத்தில் வைத்து இலஞ்ச பணத்தை பெற்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த காணிக்கு பணம் பெற்றவருடன் இவர் சென்ற போது, குறித்த இடத்தில் வைத்து கைது செய்யப்பட்டார்.
தற்போது நிலாவெளி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள இவர் அங்கு விசாரணைக்கு உற்படுத்தப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

0 Comments