கிழக்கு ஆபிரிக்காவில் அமைந்துள்ள மடகாஸ்கர் நாநாட்டின் ஜனாதிபதியாக அண்ட்ரே ரஜோலினா செயற்பட்டு வந்தார். இதனிடையே ஊழல், வறுமை, மின் தடுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு உட்பட பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி அரசுக்கு எதிராக இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபடத் தொடங்கினர்.
கடந்த மாதம் 25 ஆம் திகதி தொடங்கிய போராட்டம் ஜனாதிபதி ரஜோலினாவுக்கு எதிராகவும், அவருடைய அரசுக்கு எதிராகவும் திரும்பியது.
மேலும், அந்நாட்டு இராணுவத்தின் கெப்செட் என அழைக்கப்படும் முக்கிய படைப்பிரிவு, ஜனாதிபதியாக இருந்த அண்ட்ரேவின் உத்தரவுகளை ஏற்க மறுத்து, அரசுக்கு எதிராக திரும்பியது. இதனையடுத்து, அண்ட்ரே ரஜோலினா நாட்டை விட்டும் தப்பிச் சென்றார். ஆட்சியினை இராணுவம் கைப்பற்றியது.
இந்நிலையில், ஆட்சியை இராணுவம் கைப்பற்றிய நிலையில் இராணுவத்தின் கெப்செட் பிரிவு தளபதியாக செயற்பட்டு வரும் மைக்கேல் ரைண்டிரினா நாட்டின் புதிய அதிபராக பதவியேற்றுள்ளார்.

0 Comments