Ticker

10/recent/ticker-posts

பாடசாலை நேரம் மாற்றம் ; போக்குவரத்து வசதி உறுதி

பாடசாலையின் நேரம் நீடிக்கப்படும் பட்சத்தில், மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்குப் போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டு வருவதாகப் பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


நேற்று (25) நாடாளுமன்றத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். அத்தோடு, பாடசாலை நேரம் நீடிக்கப்படுவதற்கான காரணம் தொடர்பிலும் பிரதமர் இதன் போது விளக்கமளித்தார்.

புதிய கல்விச் சீர்திருத்தங்களுடன் ஒத்துப் போகும் வகையில் பாடசாலையின் நேரம் நீடிக்கப்படுகின்றது. இதன் மூலமாக, மாணவர்கள் கற்றுக் கொள்வதற்கும் ஆசிரியர்கள் அவர்களை மதிப்பீடு செய்வதற்கும் சிறந்த சந்தர்ப்பம் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments