இந்தியா - கர்நாடகாவிலுள்ள சாம்ராஜ்நகரில் 03 ஆம் வகுப்பு மாணவி மாரடைப்பால் வகுப்பறையிலேயே உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அவர் நேற்று முன் தினம் (6) காலை 11.30 மணியளவில் வகுப்பறையில் திடீரென மயங்கி விழுந்துள்ளார். இதனையடுத்து, ஆசிரியர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனைக்கு மாணவியை கொண்டு சென்றுள்ளனர். எனினும், குறித்த மாணவியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே மாரடைப்பால் உயிரிழந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தமது ஒரே மகளை இழந்த பெற்றோர் கதறி அழுத காட்சி அனைவரையும் கண் கலங்க வைத்ததோடு, வெறும் 08 வயதே ஆன மாணவி தேஜஸ்வினி மாரடைப்பால் உயிரிழந்தமையானது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments