இவ்வருடத்தின் 77 வது சுதந்திர தின நிகழ்வின் பொது ஜனாதிபதியினால் பாரம்பரியமாக வழங்கப்படும் 21 பீரங்கி வேட்டுகள் இடம் பெற மாட்டாது என்று பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: "77 வது சுதந்திர தின விழா நிகழ்வுகளில் குறைக்கப்பட்ட செலவுகள், குறைவான விருந்தினர்கள் மற்றும் செயற்பாடுகளுடன் நடாத்தப்படும்.
இதன்படி, நிகழ்வில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருந்த விருந்தினர்களின் எண்ணிக்கை 3,000 இலிருந்து 1,600 ஆக குறைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, இராணுவ அணிவகுப்பின் போது ஆயுதம் ஏந்திய வாகனங்கள் காட்சிப்படுத்தும் நிகழ்வானது இவ்வருடம் சுதந்திர தின விழாவின் ஒரு பகுதியாக நடத்தப்பட மாட்டாது என்பதுடன், முப்படைகள் மற்றும் பொலிஸ் அணி வகுப்புகளில் இராணுவம் மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்களின் எண்ணிக்கையும் குறைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளையில், இவ்வருட நிகழ்வில் விமான காட்சிகள் மட்டுப்படுத்தப்படும் என்றும் அமைச்சர் மேலும், தெரிவித்துள்ளார்.
TO JOIN WITH US:
https://chat.whatsapp.com/Kw2mTM2uwBh9rttj9s6g9x
0 Comments