Ticker

6/recent/ticker-posts

பாடசாலைக்கு பிள்ளைகளை சேர்க்கும் போது அநீதி நடந்தால் அறிவிக்குமாறு வேண்டுகோள்.

பாடசாலைகளுக்கு மாணவர்களை சேர்க்கும் போது அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் & அதிபர்கள் நன்மையடைந்த காலம் முடிவடைந்து விட்டது. அவ்வாறு அநீதிகள் நடந்தால், தயவு செய்து அமைச்சுக்கு அறிவிக்குமாறு பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

தொடங்கொட பகுதியில் 2025 ஏப்ரல் 23 ஆம் திகதி நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய இதனை தெரிவித்துள்ளார்.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய: ஒருமித்த கருத்தின் அடிப்படையில் சமூகத்தை மேம்படுத்த நாம் பாடுபடுகையில், தவறுகளைச் சரி செய்து முறைமையினை மாற்றுவதற்கு மக்கள் ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் தலையிடுகிறார்கள். இதுதான் நாம் எதிர்பார்த்த மாற்றமாகும். ஜனநாயகம் என்பது இதுதான். இப்போது, முன்னர் போன்று பொலிஸில் முறைப்பாடு அளிக்கச் சென்று திட்டுதல்களை கேட்க வேண்டியதில்லை. கவனமாகக் கேட்டு, முறைப்பாடுகள் சரியாக பதிவு செய்யப்படுகின்றன. சுமுகமாக உரையாடுகின்றார்கள், இதுதான் மக்கள் கேட்கும் மாற்றமாகும்.

இந்நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் மிகப் பெரிய பிரச்சைனை ஒரு பிள்ளையை பாடசாலையில் சேர்ப்பதுதான். சில காலமாகவே வழக்கத்தில் இருந்தது போல, மக்கள் தங்கள் பிள்ளைகளைப் பாடசாலையில் சேர்க்க அரசியல்வாதிகளிடமிருந்து கடிதங்களைப் பெறுவதற்கு வரிசையில் நின்றார்கள். அப்படித்தான் பிள்ளைகள் பாடசாலையில் சேர்க்கப்பட்டனர், இந்த முறையை நாங்கள் மாற்றினோம். கடிதம் கேட்பது தவறு என்று இன்று மக்கள் எங்களிடம் கூறுகின்றனர். என்பது எங்களுக்குத் தெரியும். அத்தவறு நடப்பதை பார்க்க அவர்கள் விரும்பவில்லை. இங்கு வருபவர்கள் கவலையில் அழுகிறார்கள், சில விடயங்களை கேட்கின்ற போது எனக்கும் அழுகையே வருகின்றது.

ஆனால், அவர்களில் யாரும் என்னிடம் எந்த தவறையும் செய்யச் சொல்லவில்லை. தனிப்பட்ட விடயங்களுக்காக அரசியல்வாதிகளிடமிருந்து நன்மைகளை எதிர்பார்ப்பது தவறு என்று மக்களே கூறுகின்றார்கள். எங்களிடம் வந்து தங்கள் துக்கத்தையோ அல்லது அழுகையையோ வெளிப்படுத்துகின்ற போது கூட, அரசியல்வாதிகளிடம் உதவி கேட்காமல் இருப்பதற்குப் பழக்கமாகி விட்டார்கள் என்றால், நாங்கள் மாறவில்லையா? மக்கள் மாறவில்லையா? இதைத்தான் இந்நாட்டு மக்கள் கேட்டார்கள்.

இப்புதிய அரசியல் கலாசாரம் ஒவ்வொரு மட்டத்திலும் ஏற்பட வேண்டும். இம்மாற்றம் ஜனாதிபதி, பாராளுமன்றம், அமைச்சரவை மற்றும் உள்ளூராட்சி நிறுவனங்களில் நிகழ வேண்டும். அப்படியில்லையென்றால், இதனை செய்ய முடியாது.

சில உள்ளூராட்சி நிறுவனங்கள் இருப்பது குறித்தும், குறித்த நிறுவனங்கள் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் பொது மக்களுக்குத் தெரியாது என்றும், அதற்கான காரணம், அத்தகைய நிறுவனம் இருப்பது குறித்தோ அல்லது ஏதேனும் சேவை வழங்கப்பட்டுள்ளதா? என்பது குறித்தோ எந்தவொரு அறிவும் இல்லாததே என்றும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.


Post a Comment

0 Comments