வெள்ள அனர்த்தத்தின் பின்னர் நாடு தற்போது வழமை நிலைக்கு மாறிவரும் நிலையில், பாடசாலைகளை மீளவும் ஆரம்பிப்பதற்கான திகதியை கல்வி அமைச்சு அறிக்கையொன்றின் மூலமாக வெளியிட்டுள்ளது.
இதன் அடிப்படையில், 2025 டிசம்பர் 16 ஆம் திகதி மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், தற்போதைய நிலைமை மறுபரிசீலனை செய்யப்பட்டு திகதியில் ஏதேனும் மாற்றம் ஏற்பட்டும் பட்சத்தில், அது தொடர்பிலும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments