Ticker

10/recent/ticker-posts

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சைக்கான திகதி அறிவிப்பு.

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை எதிர்வரும் ஆகஸ்ட் 10 ஆம் திகதி ஞாயிற்றுக் கிழமை நடத்தப்படவுள்ளதாக பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே இதனை தெரிவித்துள்ளார். 

பரீட்சையில் இரண்டாம் வினாப்பத்திரம் 9.30 AM - 10.45 மணி வரையிலும், முதலாம் வினாப்பத்திரம் 11.15 AM - 12.15 PM மணி வரையிலும் நடைபெறும்.

மேற்படி பரீட்சை 2025 ஆகஸ்ட் 10ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நாடளாவிய ரீதியில் 2,787 பரீட்சை நிலையங்களில் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

இப்பரீட்சைக்காக விண்ணப்பித்த சகல பரீட்சார்த்திகளினதும் வரவு இடாப்புகள் உரிய பாடசாலை அதிபர்களுக்கு தபாலில் அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments