Ticker

10/recent/ticker-posts

தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாளில் தகாத வார்த்தை : வெடித்த சர்ச்சை

அனுராதபுரம் கல்வி வலயத்தில் கடந்த 22 ஆம் திகதி தரம் - 05 புலமைப் பரிசில் பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட முன்னோடி வினாத்தாள் ஒன்றில் தகாத வார்த்தை அச்சிடப்பட்டிருந்ததையடுத்து சர்ச்சை வெடித்துள்ளது. 

இந்த எழுத்து மற்றும் அச்சுப் பிழையின் காரணமாக மாணவர்கள் உட்பட ஆசிரியர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்க நேரிட்டதாக ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அனுராதபுரம் (Anuradhapura) வலயக் கல்வி காரியாலயத்தினால் இப்பரீட்சை வினாத்தாள் தயாரிக்கப்பட்டுள்ளது. இவ்வினாத்தாளை பெற்றுக் கொண்ட அதிபர்கள் தங்களுடைய பாடசாலைகளில் குறித்த பரீட்சையை நடாத்தியுள்ளனர்.

பரீட்சையின் போது மாணவர்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டதாகவும் இது குறித்து தேடிப் பார்த்த போது வினாத்தாளில் தவறுதலாக தகாத வார்த்தையொன்று அச்சிடப்பட்டிருந்தமையும் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்விடயம் குறித்து அதிபர்கள் வலயக் கல்விக் காரியாலயத்திற்கு அறிவித்துள்ளனர். இதனைத் தொடர்ந்து திருத்தியமைக்கப்பட்ட புதிய வினாத்தாள்களை வழங்குவதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. . 

இச்சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்தப்படும் என்று மாகாண கல்வித் திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.


Post a Comment

0 Comments