உலகில் மிகவும் பாதுகாப்பான நாடுகளின் பட்டியல் வெளியாகியுள்ளது. உலகின் பாதுகாப்பான நாடுகளின் பட்டியலில் இலங்கை 57.9 புள்ளிகளுடன் 59 வது இடத்தைப் பிடித்துள்ளது.
அவ்வகையில் இந்த வருடம் நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின் பிரகாரம் (Numbeo Safety Index) 2025 ஆம் ஆண்டில் உலகின் பாதுகாப்பான நாடாக ஐரோப்பிய நாடான அன்டோரா உள்ளது.
நம்பியோ பாதுகாப்பு குறியீட்டின் பிரகாரம் அன்டோரா, ஐக்கிய அரபு அமீரகம், கட்டார், தைவான், ஓமன், ஐல் ஆப் மேன் (ஐரிஸ் கடல் தீவு), ஹாங்காங் (சீனா), ஆர்மீனியா, சிங்கப்பூர், ஜப்பான் ஆகிய நாடுகள் முதல் 10 இடங்களைஙும் பிடித்துள்ளன.
147 நாடுகளில் இலங்கை 57.9 புள்ளிகளுடன் 59 வது இடத்தை பிடித்துள்ளது.
தெற்காசிய நாடுகளில் சீனா 76.0 புள்ளிகளுடன் 15 வது இடத்தையும், இந்தியா 55.7 புள்ளிகளுடன் 66 வது இடத்தையும் பிடித்துள்ளது. பாகிஸ்தான் 65 வது இடத்தையும், வங்க தேசம் 126 வது இடத்தையும் பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த தரவரிசையில் 19.3 புள்ளிகளுடன் கடைசி இடத்தில், அதாவது, மோசமான பாதுகாப்பு கொண்ட நாடாக வெனிசுலா உள்ளது.
0 Comments