Ticker

10/recent/ticker-posts

பிரபல தமிழ் திரைப்பட இயக்குநர் மரணம்.

 தமிழ் திரைப்பட இயக்குநரான வேலு பிரபாகரன், கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.

இவர் ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். எனினும், சிகிச்சை பலனளிக்காத நிலையில், நேற்று வியாழக்கிழமை (ஜூலை 17) அவர் உயிர் பிரிந்தது.

வேலு பிரபாகரன் 1980 ஆம் ஆண்டில் வெளியான 'இவர்கள் வித்தியாசமானவர்கள்' என்ற படத்தின் மூலமாக, ஒளிப்பதிவாளராக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் வேலு பிரபாகரன்.

தொடர்ந்து, 1989 ஆம் ஆண்டு வெளியான 'நாளைய மனிதன்' என்ற திரைப்படத்தின் மூலம், இயக்குநராக அவதாரம் எடுத்தார். அதனை தொடர்ந்து, நெப்போலியன், சத்தியராஜ் உள்ளிட்ட பல்வேறு நடிகர்களை வைத்து படங்களை இயக்கியுள்ளார்.

மேலும், வேலு பிரபாகரனின் காதல் கதை, ஒரு இயக்குனரின் காதல் டைரி, பீட்ஸா 3 என்று 10 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். கடைசியாக, கடந்த மே மாதம் வெளியான கஜானா திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

முன்னதாக, தமிழ் திரையுலகின் முதல் பெண் இயக்குநர் என்று கருதப்படும் ஜெயதேவி என்பவரை திருமணம் செய்து கொண்டார். அதனை தொடர்ந்து, தனது 60 வயதில், வேலு பிரபாகரனின் காதல் கதை படத்தில் தன்னுடன் நடித்த ஷிர்லே தாஸ் எனும் நடிகையை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த இவர், தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில், நேற்று மதியம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவிற்கு, திரைத்துறையினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments