Ticker

6/recent/ticker-posts

பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை கொதி தண்ணீரில் போட்டு கொலை செய்த தாய்.

இந்தியாவின் கர்நாடகா மாநிலத்தில் பால் குடிக்க மறுத்த பச்சிளம் குழந்தையை வெந்நீரில் போட்டு கொலை செய்யத தாயின் செயல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் அருகிலுள்ள நலமங்களா என்ற பகுதியை சார்ந்த பெண் ஒருவர் கடந்த 02 நாட்களுக்கு முன்னர் பிறந்து 38 நாட்களே ஆன தனது ஆண் குழந்தையை கொதிக்கும் வெந்நீரில் போட்டு கொலை செய்துள்ளார்.

குறித்த பெண்ணிற்கு  குறைப் பிரசவதில் குழந்தை பிறந்த நிலையில், அவர் சில நாட்களாக தனியாக வசித்து வந்ததாக கூறப்படுகின்றது.

குறித்த பெண்ணின் கணவர் மதுவுக்கு அடிமையானதால் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாக சொல்லப்படும் நிலையில்,  விஸ்வேஷ்புராவிலுள்ள தனது தாயின் வீட்டுக்கு அப்பெண் சென்றுள்ளார்.

சம்பவ தினத்தன்று இரவு  குழந்தை அழத் தொடங்கியுள்ளது. பால் கொடுத்த போதிலும் பாலை குடிக்கவில்லை. பாலை குடிக்காமல் அழுது கொண்டிருந்த குழந்தையை ஒரு பாத்திரத்தில் வெந்நீரை காய வைத்து நீரின் உள்ளூ துக்கி வைத்துள்ளார்.இதில் தீக்காயம் ஏற்பட்டு குழந்தை உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரசவத்துக்கு பின்னர் ஏற்பட்ட மன அழுத்தத்தால் குறித்த பெண் பாதிக்கப்பட்டு இருக்கலாம் என்று சந்தேகிக்கும் பொலிஸார், அதனால் அவர் இப்படிச் செய்திருக்கலாம் என்று கூறுகின்றனர்.

இந்நிலையில், குறித்த பெண் செய்தது கொடூரமான செயல் என்று பலரும் விமர்சித்து வருகின்றனர்.


Post a Comment

0 Comments