Ticker

10/recent/ticker-posts

மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை ஆரம்பம்.

பாடசாலைகளின் மூன்றாம் தவணை கல்வி நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகிறது.

2025 ஆம் ஆண்டின் அரச பாடசாலைகள் மற்றும் அரச அனுமதி பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்களம் மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான இரண்டாம் பாடசாலைத் தவணை கடந்த 07 ஆம் திகதி நிறைவடைந்தது. 

இதன்படி, குறித்த பாடசாலைகளின் மூன்றாம் தவணை கற்றல் நடவடிக்கைகள் நாளை (18) ஆரம்பமாகும் என்று கல்வியமைச்சு அறிவித்துள்ளது. 

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 25 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments