பாகிஸ்தான் மீண்டும் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை அறிமுகப்படுத்த வுள்ளதாகவும் இது தொடர்பான சட்டமூலம் விரைவில் வர்த்தமானியில் வெளியிடப்படுமென்று எதிர்பார்க்கப் படுவதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இச்சட்டம் பயங்கரவாத அமைப்புகளை எதிர்கொள்ளவும், நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டதாகவும் பாகிஸ்தான் அரசு, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் அமெரிக்காவுடன் ஒத்துழைக்க ஒப்புக் கொண்டுள்ளதாகவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், பயங்கரவாத அமைப்புகளுக்கு எதிரான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது. இச்சட்டமானது, நாட்டின் பாதுகாப்பை உறுதி செய்வதோடு, மனித உரிமைகளையும் பாதுகாக்கும் வகையிலு வடிவமைக்கப்படும் என்று கூறப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தின் மூலம், பயங்கரவாத செயற்பாடுகளில் ஈடுபடும் நபர்கள் மற்றும் அமைப்புகளை கண்காணிக்கவும், அவர்களை சட்டத்தின் முன் நிறுத்தவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இச்சட்டம் பயங்கரவாத செயல்களால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்கவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும் வழிவகை செய்யும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பாகிஸ்தான் அரசு, இச்சட்டத்தை கொண்டுவருவதன் மூலம், நாட்டில் நிலவும் பயங்கரவாத அச்சுறுத்தலை கட்டுப்படுத்தவும், இதன் மூலமாக மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் முனைப்பு காட்டுகிவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments