Ticker

10/recent/ticker-posts

பாகிஸ்தான் சுதந்திர தின கொண்டாட்டத்தின் போது நடந்த சோகம்

 பாகிஸ்தான் சுதந்திர தினம் கொண்டாட்டத்தின் போது 03 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் இருந்து பிரிந்து சென்ற பாகிஸ்தான் ஆகஸ்ட் 14 ஆம் திகதி சுதந்திர தினம் கொண்டாடுகின்றது. அந்த வகையில் நேற்று (14) பாகிஸ்தானியர்கள் சுதந்திர தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.


சில இடங்களில் துப்பாக்கியால் சுட்டு மகிழ்ந்து கொண்டாடப்பட்டுள்ளது. இந்நடவடிக்கையால் 03 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தானின் கராச்சியில் பொறுப்பற்ற முறையில் துப்பாக்கியால் சுட்டு சுதந்திர தினத்தை கொண்டாடிய போது 03 பேர் உயிரிழந்துள்ளனர். இதில் 08 வயது சிறுமி மற்றும் 60 வயதிற்கு மேற்பட்ட முதியவர் ஒருவர் உயிரிழந்ததுடன் 60 பேர் காயமும் அடைந்துள்ளனர். சிறுமி அசிசாபாத்தில் குண்டு பாய்ந்து உயிரிழந்த நிலையில்இ கோரங்கி என்ற இடத்திலும் ஒருவர் பலியாகியுள்ளார்.

மீட்புப்படை அதிகாரிகள் இச்செயலுக்கு கண்டனம் தெரிவித்ததோடு பொறுப்பற்ற இது அபாயகரமானது என்று தெரிவித்துள்ளனர். மேலும், பொதுமக்கள் பாதுகாப்பான வகையில் சுதந்திர தினத்தை கொண்டாட வேண்டும் ன்றும் தெரிவித்துள்ளனர்.


Post a Comment

0 Comments