2026 ஆம் ஆண்டுக்கான ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு, அதாவது வரவு செலவுத் திட்ட உரை நாளை (07) இடம்பெறவுள்ளது.
நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராகிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, நாளை (07) மாலை ஒதுக்கீட்டுச் சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பைச் சமர்ப்பிக்கவுள்ளார்.
இதன்படி, வரவு செலவுத்திட்ட 02 வது வாசிப்பு மீதான விவாதம் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி முதல் 06 நாட்கள் இடம் பெறவுள்ளது.
இரண்டாவது வாசிப்பின் வாக்கெடுப்பு 14 ஆம் திகதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 6.00 மணிக்கு நடத்தப்படவுள்ளது. குழு நிலை விவாதம் 2025 நவம்பர் 15 ஆம் திகதி முதல் 17 நாட்கள் நடத்தப்படவுள்ளது. மூன்றாவது வாசிப்பின் வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 05 ஆம் திகதி பிற்பகல் 6.00 PM மணிக்கு நடத்தப்படவுள்ளது.

0 Comments