Ticker

10/recent/ticker-posts

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்க தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை.

இலங்கையில் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு கையடக்கத் தொலைபேசி பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டமை குறித்து மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சு தனது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளது.

‎இந்நடவடிக்கை தொடர்பாக அரசாங்கத்திற்குள் எந்த அதிகாரப்பூர்வ கலந்துரையாடல்களும் நடைபெறவில்லை என்று பிரதி அமைச்சர் நாமல் சுதர்சன தெரிவித்துள்ளார்.

‎ஒரு முடிவு எடுப்பதற்கு முன் குறிப்பிடத்தக்க விவாதங்கள் தேவைப்படும் என்று அவர் மேலும் கூறினார். “நாங்கள் இன்னும் எதையும் விவாதிக்கவில்லை. இது ஒரு கருத்து மட்டுமே.

‎இதனை செய்ய வேண்டுமானால், நீதி அமைச்சு போன்ற பிற அமைச்சுக்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். சில நாடுகள் ஏற்கனவே இது போன்ற நடவடிக்கைகளை செயற்படுத்தியுள்ளன.

‎இலங்கையில் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவர்கள் கையடக்க தொலைபேசிகளை பயன்படுத்துவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் தற்போது ஆலோசனை நிலையில் உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

‎12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளை வைத்திருப்பதையோ அல்லது பயன்படுத்துவதையோ தடுக்கும் தடையை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக மகளிர் மற்றும் குழந்தைகள் நல அமைச்சர் சரோஜா சாவித்ரி போல்ராஜ் முன்பு அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

Post a Comment

0 Comments