Ticker

10/recent/ticker-posts

கிண்ணியா மக்களின் நீண்ட காலக் கோரிக்கை நிறைவு.

கிண்ணியா -குட்டிகராச்சி கடற்கரை வீதிக்கான கட்டுமானப் பணிகள் இன்று (17) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டன.

நீண்ட காலமாகப் புறக்கணிக்கப்பட்டு, பொது மக்களின் அன்றாடப் போக்குவரத்துக்குப் பல்வேறு சிரமங்களை ஏற்படுத்தி வந்த குறித்த வீதியின் அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டமை அந்த பகுதி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது​.

உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் அரசாங்கத்தின் கிராமிய வீதி அபிவிருத்தி திட்டத்தின் கீழ், குறித்த பணிகளுக்காக ரூபாய் 35 இலட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த நிதி ஒதுக்கீட்டின் மூலமாக மிகவும் மோசமான நிலையில் காணப்பட்டிருந்த குட்டிகராச்சி கடற்கரை வீதி செப்பனிடப்பட்டு, மக்கள் இலகுவாகப் பயணிக்கும் வகையில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளது.​

கிண்ணியா பிரதேச செயலாளர் M. H. M. கனி, கிண்ணியா நகர சபை உறுப்பினர் M. H. நியாஸ் உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்களும் பொதுமக்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

குறித்த அபிவிருத்திப் பணி, பிரதேசத்தின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.


Post a Comment

0 Comments