இந்தியாவில் கடந்த சில மாதங்களாக அரசியல் கட்சித் தலைவர்கள், திரை பிரபலங்கள், பாடசாலைகள், விமானங்கள் மற்றும் விமான நிலையங்களுக்கு சமூக ஊடகங்கள் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டு வருகின்றது.
அவ்வகையில், சென்னை DGP அலுவலகத்திற்கு இன்று (07) அதிகாலை E-Mail மூலம் வெடிகுண்டு மிரட்டல் வந்துள்ளது. இதில் சென்னை ஈக்காட்டுத்தாங்கலிலுள்ள நடிகர் அருண் விஜய் வீட்டில் வெடிகுண்டு வைக்கப்பட்டுள்ளதாக குறித்த ஈ-மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்தது.
அதன் பேரில், வெடிகுண்டு நிபுணர்கள் மோப்ப நாய்களின் உதவியுடன் சம்மந்தப்பட்ட இடங்களில் சோதனை நடத்தினர். சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் புரளி என்று தெரியவந்துள்ள நிலையில், மிரட்டல் விடுத்த நபர் குறித்து பொலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

0 Comments