தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியனின் தந்தையும் மறைந்த முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசுக் கட்சியின் தலைவருமான சி.மூ. இராசமாணிக்கம் அவர்களுடைய புதல்வருமான வைத்தியர் இராஜபுத்திரன் இராசமாணிக்கம் நேற்று (07) காலமானார்.
அன்னாரின் திருவுடல் இன்று சனிக்கிழமை (08) பிற்பகல் 2.00 மணியளவில் பொரளை Jayaratne Respect ஹோம் இல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பின்னர், அன்னாரின் திருவுடல் நாளை ஞாயிற்றுக்கிழமை (09) மாலை 6.00 PM மணியளவில் பொரளை பொது மயானத்தில் தகனம் செய்யப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 Comments