பாடசாலை நேரத்தை அதிகரிக்கும் தீர்மானத்தை இரத்துச் செய்ய அரசாங்கத்துக்கு எதிர்வரும் 07 ஆம் திகதி வரை கால அவகாசம் வழங்குவதாக ஆசிரியர், அதிபர் தொழிற்சங்க கூட்டணி தெரிவித்துள்ளது.
அரசாங்கத்தால் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை மாற்றாவிட்டால் 2025 டிசம்பர் முதல் வாரத்தில் நாடளாவிய தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என்றும் குறித்த கூட்டணி எச்சரிக்கை விடுத்துள்ளது.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே சங்கப் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் மேற்கு குறித்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

0 Comments