Ticker

10/recent/ticker-posts

இலங்கை - பாகிஸ்தான் தொடரின் போட்டிகள் ஒத்திவைப்பு

 பாகிஸ்தானில் நேற்று முன்தினம் (11) இடம் பெற்ற பயங்கரவாத தற்கொலை குண்டுத் தாக்குதலையடுத்து அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை குழாமின் பெரும்பாலான வீரர்கள் மற்றும் பணிக் குழாம் நாடு திரும்புவதற்கு எதிர்பார்த்திருந்தனர். 

இதனால் இன்று (13) நடைபெறவிருந்த போட்டியை திட்டமிட்டவாறு நடத்துவதில் சிக்கல் ஏற்பட்டிருந்தது.

இதனையடுத்து ஶ்ரீ லங்கா கிரிக்கெட் நிர்வாகமும் பாகிஸ்தான் கிரிக்கெட் சபையும் நீண்ட கலந்துரையாடலொன்றை நடத்தியிருந்தது

இதன் பின்னர் இலங்கை அணி வீரர்கள் மற்றும் பணிக் குழாமின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கு பாகிஸ்தான் கிரிக்கெட் சபைநடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து இத்தொடரை முழுமையாக நிறைவு செய்யுமாறு இலங்கை வீரர்கள் மற்றும் பணிக்குழாமுக்கு ஶ்ரீ லங்கா கிரிக்கெட் பணிப்புரையும் விடுத்திருந்தது. 

இந்நிலையில் இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கிடையிலான ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் தொடரின் எஞ்சிய போட்டிகள் அனைத்தும் பிற்போடப்பட்டுள்ளன. 

இதன்படி குறித்த இரண்டு அணிகளுக்கும் இடையே இன்று வியாழக்கிழமை (13) இடம் பெறவிருந்த இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டி நாளையும், எதிர்வரும் 15 ஆம் திகதி இடம் பெறவிருந்த 03 வதும் இறுதியுமான ஒருநாள் போட்டி எதிர்வரும் நவம்பர் 16 ஆம் திகதியும் நடைபெறும் என்று பாகிஸ்தான் கிரிக்கெட் சபைத் தலைவர் மொஹ்சின் நக்வி தெரிவித்துள்ளார். 


Post a Comment

0 Comments