வங்கி அட்டைகள் மூலமாக பேருந்து கட்டணங்களை செலுத்தும் முறை எதிர்வரும் திங்கட்கிழமை (24) முதல் ஆரம்பிக்கப்படவுள்ளது.
போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயற்படுத்தப்படவுள்ள இந்நடவடிக்கையானது, மாக்கும்புர பல்வகை போக்குவரத்து மையத்தில் இருந்து ஆரம்பிக்கப்படவுள்ளது.
முதற்கட்டமாக, சுமார் 20 போக்குவரத்து மார்க்கங்களில் இத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இதன்படி, காலி, மாத்தறை, பதுளை நோக்கி பயணிக்கும் பேருந்துகளில் இந்த டிஜிட்டல் கட்டண முறையைப் பயன்படுத்த முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையானது பயணிகளுக்குக் கட்டணத்துக்கு மேலான மீதித் தொகையை திருப்பி வழங்குவது தொடர்பான விடயங்களில் உதவும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

0 Comments