தென்னிந்தியாவின் புரசைவாக்கம் பகுதியைச் சேர்ந்த அகஸ்டின் ஜோஷ்வா (33) என்பவருக்கும், திருத்தணியைச் சேர்ந்த 24 வயது பெண்ணுக்கும் பெற்றோர் சம்மதத்துடன் கடந்த 25 ஆம் திகதி திருமணம் நடந்துள்ளது.
இந்நிலையில், கணவர் வீட்டில் அன்றைய தினம் முதலிரவு நடப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இருவரும் அறைக்குள் சென்ற பின்னர், இருவருக்குமிடையே தாம்பத்யம் சம்பந்தமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
குறித்த வாக்குவாதத்தில் கோபமடைந்த கணவர் அகஸ்டின் ஜோஷ்வா, தனது மனைவியை மனைவியை கையால் தாக்கியுள்ளார். மேலும், ஆத்திரம் தீராததால் வீட்டிலிருந்த சுத்தியலை எடுத்து வந்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.
இதில் குறித்த மணப்பெண்ணின் இரண்டு கால்கள், கைகள், நெற்றி ஆகிய பகுதிகளில் மனைவிக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. படுகாயமடைந்த புது மணப்பெண் தனக்கு நேர்ந்த அநீதியை அவருடைய சகோதரிக்கு தொலைபேசியில் அடுத்த நாள் தெரிவித்துள்ளார்.
அடுத்த கணமே அவருடைய சகோதரி தனது தங்கையை மீட்டு அவரை மருத்துவமனையில் சேர்த்துள்ளார். பின்னர், வேப்பேரி காவல் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றையும் பதிவு செய்துள்ளார். முறைப்பட்டை ஏற்றுக் கொண்ட பொலிஸார் வழக்குப்பதிவு செய்ததுடன், குறித்த புதுமணப் பெண்ணை சுத்தியலால் கொடூரமாக தாக்கிய அகஸ்டின் ஜோஷ்வாவை நேற்று இரவு கைது செய்தமை குறிப்பிடத்தக்கது.

0 Comments