இலங்கையில் முன்பள்ளிக் கல்வி முறையை ஒன்றிணைத்து, அதனை ஒரு தேசியக் கட்டமைப்பின் கீழ் கொண்டு வருவதற்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
அலரி மாளிகையில் நேற்று (10) இடம் பெற்ற சிறுவர் சுகாதார மேம்பாட்டுக்கான தேசிய தொடர்பாடல் நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
ஒரு குழந்தையின் எதிர்காலம் மற்றும் நாட்டின் நீண்டகால மனிதவள மேம்பாடு ஆகியவற்றில் ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தி தீர்மானம் மிக்க தாக்கத்தை ஏற்படுத்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்ப கால பிள்ளைப் பருவ அபிவிருத்தி என்பது பெற்றோரின் தனிப்பட்ட பொறுப்பு மாத்திரமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகுமென்று அவர் வலியுறுத்தினார்.
ஆரம்பகால பிள்ளைப் பருவ அபிவிருத்தியை கல்வித்துறையின் ஒரு விசேட பிரிவாக அங்கீகரித்து, யுனிசெப் (Unicef) நிறுவனத்தின் தொழிநுட்ப உதவியுடன் புதிய கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.

0 Comments