பாகிஸ்தானிடம் JF-17 Thunder ரக போர் விமானங்களை பங்களாதேஷ் வாங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
போர் விமானங்கள் மட்டுமின்றி, Super Mushshak பயிற்சி விமானங்களை விரைவாக வழங்குவதற்கும், பங்களாதேஷ் விமானிகளுக்கு பயிற்சிகளை அளிக்கவும் பாகிஸ்தானிடம் வங்கதேசம் அனுமதியை கோரியுள்ளது.
பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் ஆட்சிக்குப் பின்னர் அமைந்துள்ள இடைக்கால அரசு, பாகிஸ்தானுடன் உறவை வலுப்படுத்தி வருகின்றது.
குறிப்பாக பங்களாதேஷ் தலைநகர் டாக்காவிலிருந்து பாகிஸ்தானின் கராச்சி நகருக்கு பங்களாதேஷ் அரசு நேரடி விமான சேவையை வருகின்ற ஜனவரி 29 ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.
கடந்த 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் இரு நகரங்களுக்கிடையே நேரடி விமான சேவை நிறுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கதாகும்.

0 Comments