16 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்த அமைதிப் பேச்சுவார்த்தையின் போது, அமெரிக்காவின் நிபந்தனைகளுக்கு ஈரான் உடன்படவில்லை என்று அமெரிக்க துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
நாங்கள் உடன்பாட்டிற்கு வரவில்லை. அவர்கள் எங்களுடைய நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டனர்.
அணுசக்தி விவகாரம் போன்ற அமெரிக்காவின் முக்கிய கோரிக்கைகளுக்கிணங்க ஈரான் தயாராக இல்லை. அமெரிக்கா தனது இறுதி முன்மொழிவை வழங்கி விட்டது .
அமெரிக்காவின் முன்மொழிவை ஏற்றுக் கொள்ளும் முடிவு ஈரானின் கையில்தான் உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Comments