Ticker

6/recent/ticker-posts

உள்ளூராட்சி தேர்தலில் நாணயச் சுழற்சி (Toss) மூலம் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ள வேட்பாளர்.

 நடைபெற்று முடிந்த உள்ளூராட்சித் தேர்தலில் புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளரொருவர் நாணய சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட வேட்பாளர் ஒருவரே இவ்வாறு நாணயச் சுழற்சியில் உறுப்பினராக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

புத்தளம் மாவட்டத்தின் வன்னாத்தவில்லு பிரதேச சபைக்கு வன்னாத்தவில்லு வட்டாரத்தில் போட்டியிட்ட தேசிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளின் 02 வேட்பாளர்களும் தலா 320 வாக்குகளைப் பெற்றுக் கொண்டனர்.

இதனையடுத்து, 02 வேட்பாளர்களின் சம்மதத்துடன் அங்கு நாணயச் சுழற்சி இடம் பெற்றது. குறித்த நாணயச் சுழற்சியில் ஐக்கிய மக்கள் சக்தியின் வேட்பாளர் வெற்றி பெற்றதுடன், அவர் உறுப்பினராகவும் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இத்தேர்தலில் வன்னாத்தவில்லு பிரதேச சபையில் தேசிய மக்கள் சக்தி 06 ஆசனங்களையும், ஐக்கிய மக்கள் சக்தி 05 ஆசனங்களையும், பொதுஜன பெரமுன 04 ஆசனங்களையும், முஸ்லிம் காங்கிரஸ், நல்லாட்சிக்கான தேசிய முன்னணி, தேசிய சுதந்திர முன்னணி ஆகிய கட்சிகள் தலா ஒவ்வொரு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.


Post a Comment

0 Comments