Ticker

6/recent/ticker-posts

திருமணம் செய்யவுள்ள பெண்ணை தாக்கிய பொலிஸ் கான்ஸ்டபிள் கைது.

மட்டக்களப்பு வாழைச்சேனையில் திருமணம் முடிக்க இருந்த பெண் தாக்கிய ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றி வருகின்ற பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவரை நேற்று வியாழக்கிழமை (08) கைது செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




ஆயித்தியமலை பொலிஸ் நிலையத்தில் பணி புரியும் அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த பொலிஸ் கான்ஸ்டபிள் வாழைச்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவரை காதலித்து வந்த நிலையில் அவரை திருமணம் செய்து கொள்ளவிருந்தார்.


 

விடுமுறையில் வீடு சென்ற குறித்த பொலிஸ் கான்ஸ்டபிள் நேற்று முன்தினம் திருமணம் முடிக்கவிருந்த பெண்ணின் வீட்டுக்கு சென்ற நிலையில், அங்கு இருவருக்குமிடையே ஏற்பட்ட வாய்தர்கத்தையடுத்து பெண் மீது பொலிஸ் கான்ஸ்டபிள் தாக்கியதையடுத்து அவர் காயமடைந்து மட்டு. போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.



இதனையடுத்து பொலிஸாருக்கு பெண் வழங்கிய முறைப்பாட்டினை அடுத்து குறித்த பொலிஸ் கான்ஸ்டபிளை இன்று வாழைச்சேனையில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.


 

இவ்வாறு கைதுசெய்தவரை வாழைச்சேனை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.



இது தொடர்பான மேலதிக விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.


Post a Comment

0 Comments