Ticker

6/recent/ticker-posts

IPL போட்டிகள் ஒத்திவைப்பு.

இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்குமிடையில் அதிகரித்து வரும் போர் பதற்றம் காரணமாக IPL நடப்பு தொடரை காலவரையறையின்றி ஒத்தி வைப்பதற்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை முடிவு செய்துள்ளது.

அத்துடன் இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவுகின்ற பதற்றம் காரணமாக IPL போட்டிகளில் பங்கேற்றுள்ள நாடுகளின் வீரர்கள் அவரவர் நாடுகளுக்கு மீள அழைக்கப்பட்டுள்ளனர்.

தேசிய நலன் கருதியும் பாதுகாப்பு கருதியும் போட்டிகள் IPL போட்டிகள் ஒத்தி வைக்கப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னர், இமாச்சல் - தரம்ஷாலாவில் நேற்று (08) நடைபெற்ற பஞ்சாப் - டெல்லி அணிகளுக்கிடையேயான போட்டி இரத்துச்செய்யப்பட்ட நிலையில், இரு அணி வீரர்களையும் பாதுகாப்பாக டெல்லி அழைத்து வர ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும் நடப்பு ஐ.பி.எல் தொடரில் இதுவரை 57 போட்டிகள் முடிவடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments