இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்தில் இணையம் மூலமாக காதல் உருவாகி, அதனால் ஒரு மாணவியின் வாழ்க்கை பாதிக்கப்படும் அளவுக்கு சென்ற சம்பவம், பெற்றோர்களுக்கும் மாணவிகளுக்கும் பெரும் எச்சரிக்கையாக அமைந்துள்ளது.
இது மாணவியின் கல்வியையும், பாதுகாப்பையும் கேள்விக்குள்ளாக்கும் வகையில் முற்றியுள்ளதை பொலிஸ் விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவி கடந்த 14 ஆம் திகதி பள்ளிக்கு சென்றவாறு காணாமல் போனதையடுத்து பெற்றோர் பொலிஸில் புகார் செய்துள்ளனர். பொலிஸாரால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டதை தொடர்ந்து மாணவியும் முருகனும் திருச்செந்தூரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
மாணவி பொலிஸாரிடம் கூட, “அவருடன்தான் இருப்பேன்” என்று பிடிவாதம் பிடித்ததுடன், பொலிஸ் நிலையத்திலேயே தற்கொலைக்கும் முயன்றார். இது அவருடைய இரண்டு கால்களில் பலத்த காயங்களை ஏற்படுத்தியுள்ளது.
இதனையடுத்து, மாணவி சிறுவர் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் (POCSO Act) காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார். முருகன் கைது செய்யப்பட்டுள்ளதோடு, இவர் மீது முன்பு இருந்த போக்சோ வழக்கும் விசாரணையில் உள்ளது.
இச்சம்பவம், சமூக வலைதளங்களின் பாதிப்பு, இளைய தலைமுறையின் விநோதமான நம்பிக்கைகள், “இன்புளுயன்சர்கள்” போன்றவற்றால் உருவாகும் தவறான பாதைகள் குறித்தும் சிந்திக்க வைக்கும்.
மேலும், பெற்றோர் தங்கள் பிள்ளைகளுடன் ஆரோக்கியமான தொடர்பு வைத்திருக்க வேண்டும் என்பதையும், இணையத்தில் ஏற்படும் பழக்கங்களை சிறிது சிக்கலாகக் காண வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதையும் இந்தச் சம்பவம் உணர்த்துகின்றது.
0 Comments