பாராளுமன்றத்தில் தற்போது உரையாற்றிக் கொண்டிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க அரச பாடசாலைகளின் தற்போதைய நிலவரம் தொடர்பில் புள்ளி விபரங்களுடன் கருத்துக்களை முன் வைத்தார்.
98 பாடசாலைகளில் ஒரு மாணவரும் இல்லை. 115 பாடசாலைகளில் 10 மாணவர்களுக்கு குறைவாக உள்ளனர், 20 மாணவர்களுக்கு குறைவான பாடசாலை 406 காணப்படுகின்றன. 30 மாணவர்களுக்கு குறைவான 752 பாடசாலைகள் உள்ளன.
அத்துடன், 40 மாணவர்களுக்கு குறைவாக உள்ள பாடசாலைகளின் எண்ணிக்கை 1141 என்றும், 50 மாணவர்களுக்கு குறைவான பாடசாலைகளின் எண்ணிக்கை 1506 ஆகும் என்றும் ஜனாதிபதி மேலும் சுட்டிக் காட்டினார்.
நாட்டின் மொத்த பாடசாலைகளின் 15 சதவீதமான பாடசாலைகளில் 50 மாணவர்களுக்கு குறைவாவே உள்ளனர். 100 மாணவர்களுக்கும் குறைவான பாடசாலைகள் 3144 நாட்டில் உள்ளன.
குச்சவெளியில் 02 மாணவர்களுக்கு 02 ஆசிரியர்களும் பண்டாரவளையில் 03 மாணவர்களுக்கு 03 ஆசிரியர்களும் திருகோணமலையில் 04 மாணவர்களுக்கு 04 ஆசிரியர்களும் உள்ளனர்.
சில பிரதேசங்களிலுள்ள பாடசாலைகளை முழுமையாக மூட வேண்டும் என்பதோடு, சில பாடசாலைகளை ஒன்றாக இணைக்க வேண்டும். இன்னும் சில பிரதேசங்களில் புதிதாக பாடசாலைகளை உருவாக்க வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
0 Comments