Ticker

10/recent/ticker-posts

தங்கையின் வாழ்க்கையை சீரழித்த அக்காவின் காதலன்

 வீட்டில் தனியாக இருந்த போது, 17 வயது நிறைந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த அக்காவின் காதலன் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.


விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள அக்மீமன வலஹண்டுவ பகுதியைச் சேர்ந்த   25 வயது சந்தேக நபர்  தனியார் நிறுவனத்தில் பணிபுரிபவர் என்று பொலிஸார் கூறியுள்ளனர். இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

வெளியே சென்ற காதலன் திரும்பி வந்து  வன்கொடுமை

குறித்த நபர் , பாதிக்கப்பட்ட சிறுமியின் அக்காவை காதலித்து வந்நதாக கூறப்படும் நிலையில் சம்பவம் நடைபெற்ற தினம், பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு அக்காவின் காதலன் வந்திருந்தார்.

சிறிது நேரத்தில் அக்காவுடன் வெளியே சென்ற காதலன் திரும்பி வந்து  தனது மொபைல் போனின் சார்ஜரை மறந்து விட்டதாகக் கூறி, வீட்டில் தனியாக இருந்த தங்கையை பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகின்றது.

விசாரணையைத் தொடங்கிய பொலிஸார், சந்தேக நபரைக் கைது செய்துள்ளனர், பாதிக்கப்பட்ட சிறுமியை காலி மாவட்டத்தின் கராப்பிட்டி போதனா மருத்துவமனையின் சட்ட மருத்துவ அதிகாரியிடம் ஆஜர்படுத்தினர்.

சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார் என்று மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தியதையடுத்து, சந்தேக நபர் காலி நீதவான் முன் ஆஜர்படுத்தப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.





Post a Comment

0 Comments