அணுசக்தி திட்டம் தமது விஞ்ஞானிகளின் சாதனையாக காணப்படுவதால் , அணுசக்தி செறிவூட்டலை எம்மால் ஒருபோதும் கைவிட முடியாது என்று ஈரான் (Iran) அறிவித்துள்ளது.
இதற்குப் பதிலடியாக ஈரானும் எதிர் தாக்குதல் நடாத்தியது. அதன் பின்னர், இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே பேச்சுவார்த்தைகளின் பின்னர் போர் நிறுத்தம் ஏற்பட்டது.
இதற்கிடையே, அணுசக்தி திட்டத்தை ஈரான் கைவிட்டு பேச்சுவார்த்தையில் ஈடுபட வேண்டும் என்றும் அணுசக்தி திட்டத்தை மீண்டும் தொடங்கினால் தாக்குதல் நடத்துவோம் என்றும் அமெரிக்கா எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளது.
இந்நிலையில் அணுசக்தி திட்டத்தைத் தொடர்ந்து செயற்படுத்துவோம் என்று ஈரானின் வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அரக்சி தெரிவித்துள்ளார். அத்தோடு, தாக்குதலில் தீவிரமான சேதங்கள் ஏற்பட்டதால் அணுசக்தி திட்டம் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
0 Comments