இந்தியாவில் தூத்துக்குடி புதிய துறைமுகம், தெர்மல்நகர், லேபர் காலனியைச் சேர்ந்த அரிச்சந்திரனின் மகள் தர்ஷினி (வயது 18), கல்லூரி மாணவி.
இவர் இன்று காலை மொபைலில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவருடைய தங்கை "நான் படிக்க வேண்டியுள்ளது. இங்கே உட்கார்ந்து பேசாதே" என்று கண்டித்துவிட்டு வெளியே சென்றுள்ளார்.
சிறிது நேரத்திற்கு பின்பு அவர் திரும்பி வந்து பார்த்தபோது தர்ஷினி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டமை தெரிய வந்துள்ளது.
இது குறித்து தகவல் அறிந்து தெர்மல் நகர் காவல் நிலைய பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை மீட்டு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து பொலிஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
0 Comments