இலங்கையில் புதிய கல்விச் சீர்திருத்தங்களின் கீழ், பாடசாலை நேரங்கள் மற்றும் இடைவேளை நேரங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.
இதன்படி, பாடசாலைகள் காலை 7.30 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை நடைபெறும்., மேலும், 02 இடைவேளைகளை வழங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
பாடசாலை நேரம் அதிகரிப்பு
ஜனவரி 01 ஆம் திகதியிலிருந்து பாடசாலை நேரம் 01 நாளைக்கு 50 நிமிடங்கள் அதிகரிக்கும் என்பதால், மாணவர்களால் அதனை தாங்க முடியாது.
எனவே, தினமும் காலை 10.10 AM மணி முதல் காலை 10.30 மணி வரை மற்றும் மதியம் 12.10 AM மணி தொடக்கம் மதியம் 12.20 PM வரை இரண்டு இடைவேளை வழங்கப்பட்டுள்ளதாக தேசிய கல்வி நிறுவனத்தின் உதவி பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசோக டி சில்வா தெரிவித்துள்ளார்.
அத்துடன், வகுப்பு நேர அட்டவணைகளும் மாற்றப்பட்டுள்ளன.
இதன்படி, காலை 7.40 AM முதல் 8.30 AM மணி வரை, காலை 8.30 AM - 9.20 AM மணி வரை, காலை 9.20 AM -10.10 AM மணி வரை, காலை 10.30 AM - 11.20 AM மணி வரை, காலை 11.20 AM முதல் மதியம் 12.10 PM மணி வரை மற்றும் மதியம் 12.20 PM - 1.10 PM மணி வரை, பிற்பகல் 1.10 PM - 2.00 PM மணி வரை என நேரங்கள் மாற்றியமைக்கப்பட்டுள்ளன.
0 Comments