Ticker

10/recent/ticker-posts

பணமோசடியில் இலங்கை எத்தனையாவது இடத்தில் உள்ளது தெரியுமா?

பணமோசடி அடிப்படையில் உலகின் 164 நாடுகளில் இலங்கை 80 வது இடத்தில் உள்ளதென்று சுற்றுலாத்துறை துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க தெரிவித்தார்.

நேற்று (23) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிறுவனங்கள் (திருத்த) சட்டமூலத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இதனை தெரிவித்தார். தொடர்ந்தும் அவர் தனது உரையில் கருத்து தெரிவிக்கையில்,

"சர்வதேச நாணய நிதியம், உலகப் பொருளாதார உற்பத்தியில் 2%-5% வரை பணமோசடி என்று கூறுகின்றது, இது கருப்புப் பணம். இலங்கையில் இது மிகவும் அதிகம் என்று நான் தனிப்பட்ட முறையில் நினைக்கிறேன்.

உலகில் 164 நாடுகளை எடுத்துக் கொள்வோமானால், பணமோசடி அடிப்படையில் அவற்றை 0 முதல் 10 வரை என்று தரவரிசைப்படுத்துகிறோம். 0 என்பது மிகவும் நல்லது. நாட்டில் பணமோசடி எதுவும் இல்லை. ஆனால் அது 10 ஆக இருந்தால், அது முற்றிலும் பணமோசடி செய்யும் பொருளாதாரமாகும். ஹைட்டி என்ற நாட்டிற்கு இவ்வளவு பெரிய ஆபத்து வந்துள்ளது.  பணமோசடிக்கான அவர்களின் மதிப்பு 8.25% ஆகும்.

 

குறைந்த மதிப்பு கொண்ட நாடு ஐஸ்லாந்து. இது 1.17%. இலங்கையில் அதனை எடுத்துக் கொண்டால், பணமோசடிக்கான நமது மதிப்பு 5.28% ஆகும். நாம் உயர்ந்த இடத்தில் இருக்கின்றோம். உலகின் 164 நாடுகளில் 80 வது இடத்தில் உள்ளோம். 

எங்களுக்கு பல்வேறு உதாரணங்கள் உள்ளன. இதுபோன்ற செயலற்பாடுகள் பற்றி, இதுபோன்ற சம்பவங்கள். கடந்த காலத்தைப் பற்றி எமக்கு தெரியும். ஒரு கடை உருவாகின்றது. சிறிய கடைகளைத் திறப்பதன் மூலமாக கோடீஸ்வரர்கள் பிறக்கின்றனர். இந்த வகையான கடைகளை செய்பவர்கள் பலர் இருப்பதை நாம் அறிவோம். ஆனால் இவர்கள் கோடீஸ்வரர்களாக மாறவில்லை. 

பின்னர் பணம் சம்பாதிப்பவர்களும் காணப்படுகின்றனர். அவர்கள் மெகா மில்லியனர்களாக மாறியுள்ளனர். எனவே பணமோசடி, பல்வேறு சட்டவிரோத பரிவர்த்தனைகள் அல்லது பயங்கரவாத நடவடிக்கைகள் போன்றவற்றின் மூலமாக சம்பாதித்த பணத்தை, குறிப்பாக வணிகங்களில், மற்ற முறைகள் மூலமாக தெளிவாகக் காட்ட முடியாத அல்லது அதை சட்டபூர்வ பணமாக மாற்றுவதற்கு சட்டங்களைப் பயன்படுத்தியுள்ளோம். அதனால்தான், ஒரு அரசாங்கமாக, நாம் நிறுவனங்கள் சட்டத்தில் திருத்தங்களைக் கொண்டு வருகிறோம் என்று தெரிவித்தார்.


Post a Comment

0 Comments