காஸா பகுதியில் இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையிலான போர் தொடர்ந்து தீவிரமடைந்து வருகின்ற நிலையில், ஐக்கிய இராச்சியம், பிரான்ஸ் மற்றும் கனடா போன்ற முக்கிய நாடுகள் போரை உடனடியாக நிறுத்துமாறு இஸ்ரேலுக்கு வலியுறுத்தி வருகின்றன.
குறிப்பாக, காஸாவின் முக்கிய நட்பு நாடுகளாகக் கருதப்படும் ஐக்கிய இராச்சியம்,பிரான்ஸ் மற்றும் கனடா ஆகிய நாடுகள், இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்கள் குறித்து தங்களுடைய அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளன.
நிலைமை சீராகாவிட்டால் ‘தக்க நடவடிக்கைகள்’ எடுக்கப்படும் என்று இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுக்கு இந்நாடுகள் எச்சரித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேசமயம் அமெரிக்கா, இஸ்ரேலின் முக்கிய நட்பு நாடாக இருந்தாலும், காஸாவில் போர் நிறுத்தத்திற்கு அழுத்தம் கொடுத்து வருகின்றது.
குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காஸாவில் உடனடி போர் நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்து வருகின்றார். காஸா போர் 21 மாதங்களுக்கும் மேலாக நீடித்து வருகின்றது.
இந்த மோதலில் 57,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனிய மக்களும் 1,700 க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்களும் கொல்லப்பட்டுள்ளனர்.
இதில் பெரும்பாலானோர் பொதுமக்களாவர், குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
பல உலக நாடுகள் இந்த மனிதாபிமான பேரழிவை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு இஸ்ரேல் மீது சர்வதேச அழுத்தங்களை அதிகரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றன.
காஸாவில் ஒரு நிரந்தர போர் நிறுத்தம் ஏற்படாவிட்டால், பிராந்தியத்தில் அமைதி திரும்புவது கடினமானது என்பதே சர்வதேச சமூகத்தின் பொதுவான கருத்தாக உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
0 Comments