Ticker

10/recent/ticker-posts

கூகுள் CEO சுந்தர் பிச்சையின் தற்போதைய சொத்து மதிப்பு எவ்வளவு தெரியுமா?

கூகுள் நிறுவனத்தின் முதன்மை செயல் அதிகாரியாக இருந்து வருபவர் சுந்தர் பிச்சை. இவரின் சொத்து மதிப்பு விபரம் குறித்து பிரபல செய்தி ஊடகம் செய்திகள் வெளியிட்டுள்ளன.




கடந்த 2015 ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பொறுப்பேற்ற சுந்தர் பிச்சை இப்பதவிக்கு வந்து தற்போது அவர் 10 வருடங்களை நிறைவு செய்துள்ளார்.



சுந்தர் பிச்சை பொறுப்பேற்றது தொடக்கம் தற்போது வரை கூகுள் நிறுவனத்தின் பங்குகள் 400 சதவீதத்துக்கும் மேல் உயர்ந்துள்ளதுடன் 2023 ஆம் ஆண்டு தொடக்கம் நிறுவனத்தின் சந்தை மதிப்பு 1 டிரில்லியன் டாலருக்கும் (இந்திய மதிப்பில் சுமார் 86.5 இலட்சம் கோடி) அதிகமான உள்ளது.



குறிப்பாக செயற்கை நுண்ணறிவு (AI) துறையில் கூகுள் அடைந்த முன்னேற்றம் நிறுவனத்தின் பங்குகளை அசுர வேகத்தில் உயர்த்தியுள்ளது.



இதன் காரணமாக இந்நிறுவனத்தின் பங்குகள் எப்போதும் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. முதலீட்டாளர்களுக்கும் 120 சதவீதத்துக்கும் மேலான வருமானத்தை இது வழங்கியுள்ளது.



கூகுள் நிறுவனத்தின் இந்த பிரமாண்ட வளர்ச்சி சுந்தர் பிச்சையை பில்லியனர் அந்தஸ்த்துக்கு உயர்த்தியுள்ளது.



ப்ளூம் பெர்க் அறிக்கையின் பிரகாரம் சுந்தர் பிச்சையின் சொத்து மதிப்பும் 1.1 பில்லியன் (இந்திய மதிப்பில் 9,000 கோடி ரூபா) டொலராக உயர்ந்துள்ள்ளது.



மேலும் போர்ப்ஸ் பில்லியனர்கள் பட்டியலும் சுந்தர் பிச்சையின் நிகர மதிப்பு 1.2 பில்லியன் ரூபாய் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.



இதன் மூலமாக மிகப்பெரிய கோடீஸ்வரர் பட்டியில் சுந்தர் பிச்சை இடம் பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments